கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!

🌼கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை🌼 🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன், இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… 🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். 🌼அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். 🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!” 🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… 🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” 🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன். 🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். 🌼அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. 🌼ஆனால் அப்போது மூங்க

பழனியை நோக்கி ஓர் பயணம்




விக்னேஸ்வரன் கோயம்பத்தூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். இன்னும் இரு தினங்களில் பழனிக்கு சென்று தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்த ஆயத்தமாகி கொண்டிருந்தான். அப்பொழுது அவனை சுற்றி இருந்த அனைவரும் அவனிடம் பழனி பயணம் குறித்து பல்வேறு குறிப்புகளையும், சென்று வரும்போது பழனியிலிருந்து வாங்கி வர வேண்டியவை பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தனர்.

"வரும்போது சித்தநாதன் கடையிலிருந்து பஞ்சாமிருதம் வாங்கிகிட்டு வா  மச்சா", "சித்தநாதன் கடையிலிருந்து திருநூறு பாக்கெட் வாங்கிகிட்டு வாங்க ஜி", "பழனி கோவில் நல்ல கோவில் தான் ஜி, ஆனால் கோவிலை சுற்றி உள்ளவர்கள் தான் மோசடி காரர்கள்", "பழனியில் கோவிலை தவிர வேறேதும் சிறப்பு இல்ல ஜி, ஊர் கூட சுத்தமாக இருக்காது", "ஆம், நம் அரசாங்கம் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் உள்ள ஊரையும் மேம்படுத்த ஏதவது செய்திருக்கலாம்", "அங்கு உள்ள மோசடி காரர்களை கண்டிக்குமாறு எதாவது செய்திருக்கலாம்", "கோவில் நிர்வாகமாவது எதாவது செய்திருக்கலாம்", "கோவிலை சுற்றியே பாவம் செய்து கொண்டிருக்கின்றனர்", "நீங்கள் சக்தி வாய்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் முருகனாவது எதாவது செய்திருக்கலாம்", இப்படி அனைவரும் அவரவர் வாய்க்கு வந்ததை எல்லாம் விக்னேஸ்வரனிடம் கொட்டினர்.

அவனோ அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு அவனுக்கு தெரிந்ததையும் பேசிவிட்டு பழனிக்கு புறப்பட்டான். பொள்ளாச்சியில் அவன் தம்பி சிவகுமாரன் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறான், போதும் வழியில் அவனையும் அழைத்து செல்லலாம் என்பது அவனுடைய பிளான். அவன் அப்பா ஆதிரூபன், அம்மா அகல்யா மற்றும் தங்கை நந்திகா மூவரும் அவனுடைய சொந்த ஊரான மதுரையிலிருந்து பழனி வந்து கொண்டிருந்தனர். அண்ணனும் தம்பியும் அவர்களிடம் பழனியில் சேர்ந்துவிடலாம் என்பது பிளான்.

விக்னேஸ்வரன் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக பழனி செல்லும் பேருந்தில் ஏறி ஜன்னலோர சீட்டில் அமர்ந்தான், அவன் மனம் மகிழ்ச்சியிலும் பக்தியிலும் ஆழ்ந்திருந்தது. ஆனந்தமான பயணமாக உணர்ந்தான். அவனுக்கு பக்கத்து சீட்டில் ஒரு  30, 35 வயதுள்ள கேரளத்து ஆள் வந்து உட்கார்ந்தார். சிறிது நேரம் சென்றதும் அவர் இவனிடம் பழனிக்கு டிக்கெட் எவ்வளவு என்று கேட்டார். இவன் பொய் சேர ஒரு 2.30 மணி நேரம் ஆகும், ஆகையால் ஒரு 50, 60 ரூபாயிருக்குமென்று கூறினான். அவர் உண்மையாகவா என்று ஆச்சரியமாக கேட்டார், ஆம் என்றான் இவன். அதற்க்கு அவர் தமிழ்நாடு பரவாயில்லையே, 2.30 மணி நேரத்திற்கு பேருந்து கட்டணம் 50 60 தான் வருகிறது. இதுவே கேரளாவில் 90, 100 வருமென்றார். அப்படியே பேசிக்கொண்டு சென்றனர்.

பொள்ளாச்சியை நெருங்க நெருங்க அவ்வப்போது சிவகுமாரனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துக்கொண்டான். பொள்ளாச்சியை சேர்ந்ததும் தம்பிக்கு தகவல் கொடுத்து ஒரு வழியாக இந்த பேருந்து எடுப்பதற்குள் பெருந்தினுள் அழைத்துக்கொண்டான். ஆனால் பாவம் தம்பிதான், உட்கார இடமில்லாமல் நின்றுகொண்டு வந்தான், பேருந்து உடுமைலை சேர்ந்த போது பேருந்தில் இருந்து சிலர் இறங்கினர். நல்ல வேலையாக இவன் பக்கத்திலிருந்த கேரளத்துக்காரர் ஜன்னலோர சீட்டுக்கு ஆசைப்பட்டு அவராகவே வேறு இடம் சென்றுவிட்டார். சந்தாஷமாக சிவகுமாரனை அழைத்து பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டான். பழனி செல்லும் வரை இருவரும் பேசி சிரித்துக்கொண்டு சென்றார்கள். நள்ளிரவு பயணமென்றாலும் அந்த சோடையே தெரியாமல் சந்தோஷமாக பயணம் செய்தார்கள். அதிகாலை 4 மணிக்கு பேருந்து பழனிக்கு சென்றடைந்தது. அதற்க்கு முன்னதாகவே அவனது பெற்றோரும் தங்கையும் பழனியை வந்தடைந்திருந்தனர். மலைக்கு அருகேயே இருந்த சத்தியானந்தா ஆசிரமத்தில் ரூ. 300 கு அருமையான ஓர் ரூமை பதிவு செய்து அதில் காத்திருந்தனர்.

விக்னேஸ்வரனும் சிவகுமாரனும் வந்ததும் விக்னேஸ்வரனை அழைத்துக்கொண்டு முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அவனது அப்பா அழைத்து சென்றார். அங்கே ஒரு ருபாய் பிளேடு மற்றும் முடி காணிக்கை செலுத்த தேவையான ரசீதையும் வாங்கிக்கொண்டு அங்கே கூடியுள்ள முடி எடுப்பவர்களில் யாரிடம் சென்றால் விரைவாக காணிக்கை செலுத்தலாம் என்றாராய்ந்து ஒருவரை கண்டுபிடித்து அவர்  முன் சென்றனர். விக்னேஸ்வரன் அவர் முன் அமர்ந்தான். முடி காணிக்கை செலுத்த இங்கே இலவசம் தான் என்று போர்டில் போட்டிருந்தாலும், அங்கே இருந்தவர்கள் முடி எடுப்பதற்கு முன் காணிக்கை செலுத்த வருபவர்களிடம், "சிறியவர்களுக்கு 80, பெரியவர்களுக்கு 100, உங்களுக்கு 100, சந்தோஷமா கொடுத்துட்டு திருப்தியா சாமி கும்பிட்டுவிட்டு போங்கள்" என்று சொல்லுவது வழக்கம். விக்னேஷ்வரனிடமும் இதையே சொன்னார் அவர். அவனும் சரி என்று சொல்லிவிட்டு முடி காணிக்கை செலுத்திவிட்டு அப்பாவிடம் இருந்து 100 ரூபாய் வாங்கி அவரிடம் கொடுத்துவிட்டு ரூம்கு வந்துவிட்டனர்.

வந்து குளித்துவிட்டு முருக பெருமானை தரிசிக்கும் ஆர்வத்திலும் அதிகாலையிலேயே சென்றால் மலையேறும் போது சூரியனின் தாக்கம் அதிகமிருக்காது என்பதாலும் மேலும் அதிகாலையில் மக்கள் கூட்டமும் குறைவாகத்தான் இருக்கும் ஆகையால் முருகனை விரைவாக தரிசித்துவிடலாம் என்பதாலும் 5.30 மணிக்கெல்லாம் ரூமில் இருந்து அனைவரும் புறப்பட்டு விட்டனர்.

மலை அடிவாரத்தில் நிறைய பக்த கோடிகள் சிறுகடை வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் முடி காணிக்கை செலுத்தி வருபவர்களை, வாங்க அண்ணா, வந்து சந்தணம் பூசிக்கோங்க, வாங்க அம்மா, வந்து சந்தணம் பூசிக்கோங்க, வாங்க தம்பி , வந்து சந்தணம் பூசிக்கோங்க என்று அன்பாக அழைத்து கொண்டிருந்தனர். ஆனாலும் ஓரிருவரை தவிர யாரும் அவர்களிடம் சந்தணம் பூசிக்கொள்வதாக தெரியவில்லை. காரணம் அவர்கள் சந்தணம் பூசிக்கொள்ளுங்கள் என்றழைத்து குறைந்த விலையே உள்ள பொருள்களை இவர்களை ஏமாற்றி அதிக விலை கொடுத்து வாங்க வைத்துவிடுவார்கள் என்ற பயமே. விக்னேஸ்வரனும் யாரையும் கண்டுகொள்ளாமல் அடிவாரத்தை நோக்கி அவனது பெற்றோருடனும் உடன் பிறப்புகளுடனும் சென்று கொண்டிருந்தான். எனினும் அடிவாரத்தின் அடியில் இருந்த ஒரு வியாபாரி அம்மா இவர்களிடம் மேலே கடைகள் ஏதும் இல்லை. ஆகையால் இங்கேயே அபிஷேக பொருட்களை வாங்கிக்கொண்டு தலையில் சந்தணம் பூசிக்கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார். ஓ, சரி என்று கூறிவிட்டு அவர்களிடமே சந்தணம் பூசிக்கொண்டு பொருட்களையும் வாங்கிக்கொண்டு, அடிவாரத்தில் இருந்த விநாயகருக்கு ஒரு தேங்கையையும் உடைத்துவிட்டு கும்பிட்டுவிட்டு நிதானமாக மன அமைதியுடன் படி ஏறி மேலே சென்றனர்.

அப்போது விக்னேஸ்வரனின் தாயார் அகல்யா அவனிடம் ஒரு பாக்கெட் சூடத்தை கொடுத்து செல்லும் வழியில் எங்கெல்லாம் சூடம் எரிகிறதோ, அங்கெல்லாம் இதிலிருந்தும் ஒரு சூடத்தை எடுத்து வைத்துவிட்டு செல் என்று கூறினார். அவனும் அவ்வாறே சூடத்தை அந்த பாக்கெட் தீரும் வரை வைத்துக்கொண்டே சென்றான். மலையின் உச்சியை நெருங்கும் போது சூடமும் தீர்ந்துவிட்டது. பிறகு மேலே சென்று அர்ச்சனை சீட்டு வாங்கிக்கொண்டு முருக பெருமானை தொழுவதற்காக சென்றுகொண்டிருந்தனர். அங்கே பக்கத்தில் சில வியாபார கடைகளும் இருந்தன. அங்கே கீழே அந்த அம்மாவிடம் 100 ருபாய் கொடுத்து வாங்கிய அர்ச்சனை பொருட்கள் அனைத்தும் இங்கே 25 ரூபாய்க்கு வாங்க முடியும் என்பதை அறிந்ததும் அமைதியாக பயபக்தியோடு இருந்த  விக்னேஸ்வரனுக்கு அந்த அம்மா மீது சிறிது கோவம் வந்தது. பணம் போய்விட்டதே என்பதற்க்காக அல்ல, ஏன் இப்படி பொய் சொல்லி பழனியின் பெயரை இவர்கள் கெடுக்கிறார்கள் என்பதற்காக. இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் முருகப்பெருமானை தரிசிக்க சென்றான்.

போதும் வழியில் சில கோவில்களும் இருந்தன. அங்கே இருந்த ஐயர்கள் வரும் பக்தர்களை வழி மறித்து வந்து சாமி கும்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்று கூறினர். சாமி கும்பிட்டு முடித்ததும் திருநீறு வைத்துவிட்டு தர்ச்சனை வைத்துவிட்டு செல்லுங்கள் என்றும் கூறினர்.

அங்கே உள்ள முருக பெருமானை முனிவர் போகர் மூலிகையாலேயே வடிவமைத்துள்ளார் என்பது தமிழனின்  பெருமையாக இருந்தாலும் 1000 ஆண்டுகள் கடந்தும் மூலிகையால் ஆன முருக பெருமானுக்கு ஏதும் ஆகவில்லை என்பது முருகனின் சக்தியாகவே பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இங்கே இருக்கும் முருகனுக்கு அபிஷேகம் இல்லை என்றாலும் பக்தர்கள் வாங்கிக்கொண்டு வரும் தேங்காயை அவர்கள் மனம் கோணக்கூடாது என்பதற்க்காக அங்கே உள்ள ஐயர்கள் பக்தர்களிடம் சிறிது பணம் 50 அல்லது 100 வாங்கிக்கொண்டு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் தேங்காயை உடைத்துவிட்டு பக்தர்களிடம் அர்ச்சனை பொருட்களை திருப்பி கொடுப்பது வழக்கம்.

அவ்வாறே பக்தியுடன் முருக பெருமானை தரிசித்துவிட்டு அர்ச்சனை பொருட்களையும் வாங்கிக்கொண்டு மேலிருந்து அடிவாரத்தை நோக்கி வந்தனர். இருந்தாலும் விக்னேஸ்வரனுக்கு அந்த அம்மாவிடம் அவர்கள் செய்யும் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அதனால் வரும் விளைவுகளையும் விளக்கி இனிமேலும் இதுபோல் நடந்துகொள்ளாதீர்கள் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.. ஆகையால் கீழே வந்ததும் அவர்களிடம் சென்று நீங்கள் இந்த மாதிரி செய்யாதீர்கள், வெளியில் பழனியில் உள்ள மக்களை ஏமாற்றுக்காரர்கள் என்றெல்லாம் பேசிகொள்றர்கள், இது சரியான போக்கு அல்ல என்று விளக்கினான். ஆனால் அதற்குள் அந்த அம்மா குறுக்கிட்டு அப்படித்தான் நாங்கள் ஏமாற்றுவோம், ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள், என்று சத்தம் போட்டார்கள், இதை சற்றும் எதிர்பாராத விக்னேஸ்வரன் மனகுலைந்து போனான்.

இதையறிந்த அவனது தந்தை ஆதிரூபன், இதற்கெல்லாம் கோவம் கொல்லாதேடா, அவர்கள் இடத்தில இருந்து சற்று யோசித்து பார், அவர்கள் அப்படி சொன்னால்தான் வியாபாரம் செய்ய முடியும், இல்லையென்றால் யாரும் வாங்க மாட்டார்கள், பிழைப்பு நடத்துவது அவ்வளவு எளிதல்ல விக்னேஷ், அவர்கள் வீட்டிலும் அடுப்பு எறியவேண்டுமல்லவா, யோசித்துப்பார் என்று கூறினார்.

இருந்தாலும் விக்னேஷின் மனம் கேட்கவில்லை. அடுக்கடுக்காக அவன் மனதில் பல கேள்விகள் உதித்தன. ஒரு சில கேள்விகளை கேட்டான். சரி மேலே கடைகள் இல்லையென்று பொய் சொல்ல வேண்டுமென்ற சூழ்நிலை உள்ளதென்றாலும் ஏன் அதை, 2 மடங்கு கூட இல்லை, 4 மடங்கு அதிகமாக வைத்து விற்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் தந்தை மேலே கோவிலில் உள்ள கடைக்கு ஒரு அர்ச்சனை தட்டிற்கு 10 ரூபாய் லாபம் கிடைக்கிறதென்றால் இவர்களுக்கு 15இல் இருந்து 20 ருபாய் வரை கிடைக்கும் அவ்வளவு தான், இவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டும், மேலும் அந்த இடத்திற்கான வடகை கொடுக்க வேண்டும், மேலும் பல சிக்கல்கள் அவர்களுக்கும் உள்ளது, யோசித்துப்பார், புரியும் என்றார்.

எதற்காக இப்படி தொழில் செய்ய வேண்டும் என்றான் இவன் அடுத்த கணமே, வேறு என்ன செய்து பிழைப்பு நடத்தலாம், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், நல்ல வேலை பார்த்து கொடுக்க வேண்டும், திருமணம் செய்து வைக்க வேண்டும், வேறு என்ன வேலை செய்யலாம் என்று நீ நினைக்கிறாய் என்று இவனிடம் பதில் கேள்வியை அவர் எழுப்பினார்.

இவனும் பதில் ஏதும் சொல்லாமல், அப்போ தவறு எங்கே நடக்கிறது, அரசியல் வாதிகளிடமா, மேலதிகாரிகளிடமா, கோவில் நிர்வாகத்திடமா, வியாபாரிகளிடமா, இல்லை மக்களிடம்தானா, இதை யார் சரி செய்வது என்று யோசித்துக்கொண்டே கனத்த இதயத்துடன் கோய்ம்பத்தூருக்கே  திரும்பி வந்து தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்துக்கே வேலைக்கு சென்று கொண்டிருக்கிறான். 

Comments

Popular posts from this blog

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!

ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் !

கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்!!!